86
சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையத்தின் தீர்த்த குளத்தில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை வெள்ளியங்கிரி மலையடிவார வனப்பகுதியில் பலநூறு ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமான முறையில் ஈஷா யோகா மையம் கடிட்டங்களை கட்டியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஈஷா யோகா மையத்தின் பெரும்பாலான கட்டிடங்கள் யானைவழித்தடங்களே என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஈஷாவின் பெரிய குண்டம் எனப்படும் ஆண்கள் தீர்த்த குளத்தில் குளித்த வேலூர் கல்லூரி மாணவரான ரமேஷ் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love