Home இந்தியா ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையினரின் தாக்குதலால் பார்வையிழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையினரின் தாக்குதலால் பார்வையிழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு

by admin


ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழக காவல்துறையினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் பார்வையிழந்தவருக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி  சென்னை  உயர்நீதிமன்றில்  வழக்கு  தொடரப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் எனக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்ட நிலையில் குடியிருப்புகளுக்குள் இருந்த சிலரையும் காவல்துறையினர்  தாக்கியதாக குற்றம்சுமத்தப்பட்டது.

இவ்வகையான ஒரு தாக்குதலின் போது கார்த்திக் என்பவர் பார்வையிழந்தார் எனவும்  இதனால்  தனது மகனுக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து அவரது தாய் விமலர் வழக்கு தொடுத்துள்ளார்.

தனது மகனுக்கு சிகிச்சை அளிக்கவும், தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ள அவரது மனு   தொடர்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More