Home இந்தியா மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கையுடன் ராஜதந்திர ரீதியாக அணுகப்படுகின்றது – சுஸ்மா ஸ்வராஜ்

மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கையுடன் ராஜதந்திர ரீதியாக அணுகப்படுகின்றது – சுஸ்மா ஸ்வராஜ்

by admin


இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில்  இலங்கையுடன் ராஜதந்திர ரீதியாக அணுகப்படுகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன்  இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரிட்ஜோ என்ற மீனவர்  உயிரிழந்தமை தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படுமென இலங்கை உறுதியளித்துள்ளதாகவும் சுஸ்மா குறிப்பிட்டுள்ளார்.

லோக் சபாவில் இன்று உரையாற்றியபோது இதனைத்  தெரிவித்த அவர்  இந்திய மீனவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More