அரசாங்கம் எத்தனை வழக்குகளை தொடர்ந்தாலும் அஞ்சப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை, வெற்றிமிகு கட்சியாக மாற்றப்படும் என ரத்மலான பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குகளை சிதறிடிக்கச் செய்யும் நோக்கில் கட்சி உருவாக்கப்படவில்லை எனவும், வெற்றியீட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சியே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களை பிற்போடுகிறார்கள். எனினும் அது அதிக காலத்திற்கு செல்லுப்படியாகாது எனவும் மஹிந்த ராஜபக்ஸவே ஜனாதிபதி எனவும் அவர்; குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment