Home இந்தியா மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக முறையிட ராமேஸ்வர மீனவர்கள் டெல்லி செல்லவுள்ளனர்:-

மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக முறையிட ராமேஸ்வர மீனவர்கள் டெல்லி செல்லவுள்ளனர்:-

by admin

தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து முறையிடுவதற்காக ராமேஸ்வர மீனவர்கள் டெல்லி செல்லவுள்ளனர்.

கடந்த 6ம் தேதி தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜோவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டு நல்லடக்கம் செய்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது பற்றி சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து முறையிட ராமேஸ்வர மீனவ பிரதிநிதிகள் இன்று டெல்லி செல்கின்றனர்.

இந்த சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருப்பது, படகு, வலை போன்ற உடமைகளை சேதப்படுத்தாமல் இருப்பது, பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்பது ஆகிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி மீனவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More