அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் நேற்று நிராகரிக்கப்பட்டுள்ள நிலையிலேவே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் உறவினர்கள், நண்பர்களின் பயன்பாட்டுக்காக வாகனங்களை வழங்கியுள்ளதாகவும் இதனால் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டதாகவும் குற்றச் சுமத்தப்பட்டு விமல் வீரவன்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment