72
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவை சென்றடைந்துள்ளார்.
மூன்று நாள் பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று அதிகாலை இலங்கையிலிருந்து ரஸ்யாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார்.
மொஸ்கோ நகரின் டொமோடெடுவா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகளை ரஸ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இகோர் மொர்க்லோவ், வரவேற்றுள்ளார். ஜனாதிபதியின் இந்த பயணத்தில் ;பல முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love