Home இலங்கை கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா மகேஸ்வரன்

கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா மகேஸ்வரன்

by admin

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, தாயகம் தழுவிய ரீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த 20 ஆம் திகதி முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 31 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு சென்ற சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் குறித்து ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More