85
ஜனாதிபதி மைத்திரிபால சிறினே இன்றைய தினம் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க உள்ளார். ரஷ்யாவுக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மொஸ்கோவை சென்றடைந்தார். இலங்கை – ரஸ்ய ராஜதந்திர உறவுகளின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த பயணம் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான இன்றைய சந்திப்பின் போது, பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சுமார் நான்கு தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் முதன்முறையாக ரஸ்யா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love