இலங்கையுடனான உறவுகள் வலுப்படுத்திக் கொள்ளப்படும் என ரஸ்யா தெரிவித்துள்ளது. ரஸ்யாவிற்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவை, சந்தித்த அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நீண்ட காலமாக இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment