Home இலங்கை மன்னாரில் கடற்படையினரின் படகு மோதி ஏற்பட்ட விபத்தில் மீனவர் உயிரிழப்பு

மன்னாரில் கடற்படையினரின் படகு மோதி ஏற்பட்ட விபத்தில் மீனவர் உயிரிழப்பு

by admin

மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் சிறிய படகொன்றின் மீது கடற்படையினரின் படகு மோதி விபத்திற்குள்ளானதில்  மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் விடத்தல் தீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் என  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடற்பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்படையினர் கடலில் படகு ஒன்று மூழ்கி கிடப்பதாக தெரிவித்த தகவலையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற மீனவர்கள் பல மணிநேரத் தேடுதலின் பின்னர் படகினையும் மீனவரின் உடலையும்  மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்  வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்படையினரின் படகு மோதியமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்துகொண்ட கிராம மக்கள் விடத்தல் தீவு கடற்படை முகாமை நேற்றிரவு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதனையடுத்து இரண்டு கடற்படை வீரர்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More