கடந்த காலத்தை போன்றே இன்றும் குற்றச் செயல்களில் ஈடுப்படுபவர்கள் இருப்பதனால் அவர்களிடமிருந்து இந்நாட்டை பாதுகாக்க வேண்டுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (24) இலங்கை துறைமுக அதிகார சபையில் நியமனங்களைப் பெற்றுக் கொண்ட பாதுகாப்பு ஊழியர்களிற்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று துறைமுகம் தொடர்பாக மக்கள் மனங்களில் காணப்பட கெட்ட சித்திரம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு எதிர்காலத்தை கையளிக்க வேண்டுமாயின் முதலாவதாக தாம் பணியாற்றுகின்ற நிறுவனத்தில் நேர்மையான சேவையினை ஆற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி உள்ளடங்கிய துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டுள்ளார்கள்.
Add Comment