உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இனியும் காலம் தாழ்த்தாது உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை உனடடியாக நிவர்த்தி செய்து தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதிகள் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment