Home இலங்கை இந்திய பிரதமரின் இலங்கைப்பயணம் குறித்து உயர்ஸ்தானிகர், மாநாயக்க தேரர்களுக்கு விளக்கம்

இந்திய பிரதமரின் இலங்கைப்பயணம் குறித்து உயர்ஸ்தானிகர், மாநாயக்க தேரர்களுக்கு விளக்கம்

by admin


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப்பயணம் தொடர்பில் கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களுக்கு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து விளக்கமளித்துள்ளார். நேற்றைய தினம் கண்டியில்  மகாநாயக்கர்களைச் சந்தித்தபோதே அவர் இது குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார். இந்த நிலையில், மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், பௌத்த மதத்தின் மீது இந்திய பிரதமர் பெரும் மதிப்பை வைத்திருப்பதாகவும், அவர் இலங்கை வரும் போது கண்டிக்குப் பயணம் மேற்கொள்வார் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More