Home இலங்கை சாதாரண தரப் பரீட்சை 8224 மாணவ மாணவியர் 9 ஏ சித்தி பெற்றுக் கொண்டுள்ளனர்

சாதாரண தரப் பரீட்சை 8224 மாணவ மாணவியர் 9 ஏ சித்தி பெற்றுக் கொண்டுள்ளனர்

by admin


சாதாரண தரப் பரீட்சை 8224 மாணவ மாணவியர் 9 ஏ சித்தி பெற்றுக் கொண்டுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சையில் 2015 ஆம் ஆண்டை  விட 10 ஆயிரத்து 780 மாணவர்கள் 2016 ஆம் ஆண்டில், உயர்தரத்திற்கு மேலதிகமாக தகுதி பெற்றுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர சாதரணதர பரீட்சைக்காக தோற்றிய மாணவர்களுள், 69.33 சதவீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றனர்.

இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர சாதாரண   பரீட்சைக்காக தோற்றிய மாணவர்களுள் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 69.94 சதவீதமாக ஆக உயர்வடைந்துள்ளது. கணித பாடத்தில் சித்தியானது, 2015 ஆம் ஆண்டைவிட 2016 ஆம் ஆண்டில், 7.63 சதவீதத்தால் அதிகரித்து,  62.81 சதவீதமாக உள்ளது. இதற்கமைய, சித்தியடைந்தவர்களின் 28,877 ஆல் அதிகரித்துள்ளது.

மேலும், 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையானது, 2015 ஆம் ஆண்டைவிட 2016 ஆம் ஆண்டில் 2,122 ஆல் அதிகரித்துள்ளது. 2015 இல், 6,102 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றிருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் 8,224 பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More