Home இலங்கை கிளிநொச்சி மாவட்டசெயலகம் முன் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்டசெயலகம் முன் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்

by admin

பட்டமுடிப்பு முடித்து காத்திருக்கும் எமக்க வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி தருமாறு கோரி இன்று கிளிநொச்சி மாவட்டசெயலகம் முன் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இதன்போது ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது

குறித்த மகஜரில்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் இன்றுடன் முப்பத்தியிரண்டு நாட்களாக யாழ் மாவட்ட செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி சாத்வீக வழியிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது யாவரும் அறிந்ததே. எனினும் எமது இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கான எந்தவிதமான சாதகமான பதில்களும் உரிய தரப்புக்களிடம் இருந்து கிடைக்கப்பெறாமையானது மன வேதனையளிக்கின்றது.

கடந்த 27.02.2017 திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட எமது கவனயீர்ப்பு போராட்டத்தில் 31.03.2012 காலப்பகுதிக்கு பின் எமக்கான எந்தவிதமான அரச நியமனங்களும் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தோம்.  2015 ஆம் ஆண்டிலும் எமது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வடமாகாண முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ‘

அனைத்து பட்டதாரிகளுக்கும் அரச நியமனங்களை வழங்குக’ எனும் கொள்கையின் அடிப்படையில் காலவரையறையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எமது கவனயீர்ப்பு போராட்டத்தின் பதினொராவது நாள் (09ஃ03ஃ2017) வடமாகாணசபை அமைச்சர்களுக்கும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடலில் வடமாகாணத்திலுள்ள அரச வெற்றிடங்களில் பட்டதாரிகளை உள்ளீர்த்தல் வேண்டும் பட்டதாரிகளின் பட்டச்சான்றிதழின் இறுதித் திகதியின் அடிப்படையில் உள்ளீர்த்தல் வேண்டும்  தொண்டராசிரியர் நியமனத்திலுள்ள முறைகேடுகளை விசாரணை செய்து ஆரம்பப்பிரிவு ஆசிரியர் சேவைகளில் பட்டதாரிகளை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்  என  குறிப்பிடப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More