Home இலங்கை சோழர் காலத்தைப்போல இப்போது ஒரு விகாரையை அமைக்க முடியாதுள்ளது! மஹிந்த ராஜ­பக்ஷ:-

சோழர் காலத்தைப்போல இப்போது ஒரு விகாரையை அமைக்க முடியாதுள்ளது! மஹிந்த ராஜ­பக்ஷ:-

by admin

சோழ மன்­னர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த கால­கட்­டத்தில் பௌத்த தர்­மத்தை அழிக்க முனைந்­தனர். அதைப்போலவே இன்று ஒரு விகாரையையோ, புத்தர் சிலையையோ அமைக்க முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காரணம்  அதற்கு சீமெந்து எங்­கி­ருந்து கிடைத்­தது என விசா­ரிக்கும் ஆட்­சி­யா­ளர்கள் நாட்டில் உள்­ளனர். இவர்­களும் தர்­மத்­திற்கு எதி­ரா­கவே செயற்­ப­டு­கி­றார்கள் என்றும் மஹிந்த ராஜபக் ஷ  கூறி­யுள்ளார்.

இப்போது ஒரு விகாரையை அமைத்தால், சீமெந்து எங்­கி­ருந்து கிடைத்­தது என ரக­சிய பொலிஸார் விசா­ரிக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ள என்று தெரிவித்துள்ள அவர் அர­சாங்­கமே இதனை மேற்­கொள்­கின்றது என்றும் குற்றம் சுமத்தினார்.

அர­சி­யல்­வா­தி­களை அடக்கு முறைக்கு உள்­ளாக்கலாம் எனக் கூறிய அவர்,  மதத்­தையும் தர்­மத்­தையும் விஹா­ரை­யையும் அடக்கு முறைக்கு உள்­ளாக்க முடி­யாது என்றார். அவ்­வாறு அடக்கு முறைக்கு உள்­ளாக்க முனைந்தால் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.அண்­மையில் அரச மர­மொன்றை வெட்­டி ­சாய்க்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்று குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச  அதனை வழி­படுவோரின் எதிர்ப்பால் அம்­மு­யற்சி கைவி­டப்­பட்­டதாகவும் தெரிவித்தார்.

சோழ மன்­னர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த காலத்தில் பௌத்த தர்­மத்தை அழிக்க முனைந்­தனர். ஆனால் எம்­ம­வர்கள் தர்­மத்தை பாது­காத்­துள்­ளனர்.எமது பிள்­ளைகள் நல்ல வழியில் வாழ வேண்டும். அதற்கு எமது தர்மம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More