Home இலங்கை ஒரேயொரு மகளுக்கு தீ மூட்டி படுகொலை செய்த தந்தை

ஒரேயொரு மகளுக்கு தீ மூட்டி படுகொலை செய்த தந்தை

by admin


தனது ஒரேயொரு மகளுக்கு தீ மூட்டி படுகொலை செய்த தந்தை தெல்லிப்பளை காவல்துறையினரால் கைது செய்யபப்ட்டு உள்ளார்.  யாழ். அளவெட்டியை சேர்ந்த தி. ஜெனனி (வயது 27) எனும் பெண்ணே தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணின் தந்தை தினமும் இரவு வேளைகளில் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளையுடன் தகராறில் ஈடுபட்டு வருபவராவர்.  சம்பவ தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து வழமை போன்று மனைவி பிள்ளையுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

அதனால் மனமுடைந்து போன மகள் , தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முனைந்துள்ளார். அதனை அவதானித்த தாய் மகளை சமாதனப்படுத்தி தற்கொலை முயற்சியில் இருந்து காப்பற்றி உள்ளார்.  மகளும் சமாதானமாகி உடைகளை மாற்றி குளிக்க செல்ல முற்படுகையில் , தந்தை ‘ நீ சாக தானே போன நீ , செத்து போ ‘ என கூறியவாறு மகள் மீது தீக்குச்சியினை மூட்டி எறிந்துள்ளார்.

அதனால் மகளின் உடலில் தீ பற்றி எரிந்தது. உடனேயே தாயும் அயலவர்களும் இணைந்து மகளின் உடலில் எரிந்த தீயினை அணைத்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி மகள் உயிரிழந்து உள்ளார்.

குறித்த குடும்பத்தில் உயிரிழந்த பெண் மாத்திரமே பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி இரவு நடைபெற்றது. குறித்த சமபவம் தொடர்பில் தந்தை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More