Home இலங்கை தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம் :

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம் :

by admin

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று நாற்பத்தைந்தாவது நாளாக தொடர்கிறது. கடந்த  பெப்ரவரி 20ம்திகதி   கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக  தொடர்கின்ற நிலையில்  தங்களை அனைவரும் கைவிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துரள்ளனர்.

45 ஆவது நாளாக தாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்காக   தீர்க்கமான முடிவை எதிர்பார்த்து கவனயீர்ப்பை ஆரம்பித்த   போதும்  இந்த போராட்டத்தை எவரும் கண்டுகொள்ள வில்லை என கவலை தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடுத்த வரும் நாட்களில்  தாங்கள் தங்களின்  போராட்ட வடிவத்தை மாற்றும் வகையில் கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அந்த வகையில்  மாவட்ட மட்டத்தில் அரச நிர்வாக கட்டமைப்பை முடக்கி  காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி  போராட்டவுள்ளதாக  அவர்கள்  தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More