மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்துக்குள்ளாகியதாக குற்றவாளியாக இனங்காணப்பட்ட 65 வயதான நபர் ஒருவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு அகுருஸ்ஸ – எல்லவெல பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மேற்குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையுடன் 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment