Home இலங்கை சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் – சல்லி செட்டியிடம் முதலமைச்சர்

சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் – சல்லி செட்டியிடம் முதலமைச்சர்

by admin

சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்  சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் சல்லி செட்டியிடம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த  சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள், காணாமல் போனவர்களின் உறவுகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலவரங்கள் குறித்து ஆராய்ந்திருந்த நிலையில் இன்றையதினம் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து வடமாகாண மக்களின் நிலமைகள் குறித்து ஆராய்ந்திருந்த போதே முதலமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்துக் கூறிய வடமாகாண முதலமைச்சர்  எம்மால் முடிந்தவரை எமது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி வந்திருக்கின்றோம் எனவும்  அதற்குரிய நிவாரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதனை சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டவர்களும் வெளிநாட்டு அரசாங்கங்களும், மக்களுடைய உரிமைகளுக்காக போராடும் நிறுவனங்களும், அரசாங்கத்திற்கு போதியளவு நெருக்குதல்களைக் கொடுத்தால் மாத்திரமே மக்களின் தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், அரசாங்கம் அவற்றினை நடைமுறைப்படுத்துமெனவும் வலியுறுத்தியதாக அவர்  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More