இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த வெடிவிபத்தில் வீடு தரை மட்டமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி, சகோதரி மற்றும் அவர்களது இரு குழந்தைகள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இடம்பெறவிருந்த திருமண விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பட்டாசுகள் வைத்திருந்தநிலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வெடி விபத்துக்கான காரணம் கண்டறியப் படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment