தமிழக தேர்தல் ஆணையாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாலிக் பெரோஸ்கான் இன்று பதவியேற்றுள்ளார். இதுவரை தேர்தல் ஆணையாளராக பதவி வகித்து வந்த பி.சீதாராமன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்திருந்த பெரோஸ்கான், உள்ளூராட்சி அமைப்புகள் தொடர்பான பணிகளில் சிறந்த அனுபவம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment