பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் ஜப்பானுக்கு பயணம் செய்ய உள்ளார். ஜப்பான் பிரதமர் சின்சோ அபே உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரதமர் சந்திக்க உள்ளார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த பயணம் அமையவுள்ளது. அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் சரத் அமுனுகம ஆகியோரும் பிரதமருடன் ஜப்பானுக்கு பயணம் ; செய்ய உள்ளனர்.
Add Comment