கிளிநொச்சியில் நகரில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்திற்கு பின்புறமாக தனியார் காணிக்குள் இரவு வேளை உள்நுழைந்த போது நாயினால் கடிக்கப்பட்டு இறந்த நிலையில் வனஜீவராசிகள் அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.
வழமையான சிறுத்தைகள் மஞ்சல் புள்ளியுடன் காணப்படும் எனவும் ஆனால் குறித்த சிறுத்தை குட்டி வெள்ளை நிறப் புள்ளிகளுடன் காணப்படுகிறது என வன ஜீவராசிகள் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்
Add Comment