Home இலங்கை கொலன்னாவை திடீர் அனர்த்தம் குறித்து விசேட கவனம் – அரசாங்கம்

கொலன்னாவை திடீர் அனர்த்தம் குறித்து விசேட கவனம் – அரசாங்கம்

by admin


கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையினால் அங்கு வாழும் மக்கள் குறித்து உடனடி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.  அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கும் அவர்களது நலநோம்புகை நடவடிக்கைகளுக்காகவும் அனர்த்தத்திற்குள்ளானவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி முப்படையினர், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் பிரதேசத்தைப் பார்வையிடச் செல்வதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு பிரதேச மக்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.  அவ்விடத்தைப் பார்வையிடச் செல்வது அங்குள்ள மக்களுக்குத் தொந்தரவாக அமையும் என்பதால் அப்பிரதேசத்தைப் பார்வையிடச் செல்வதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொலன்னாவ, மீட்டொத்தமுல்லை பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழந்ததன்  காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள பல வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More