Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுடன் விரைவில் பேச்சு – மாவை

காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுடன் விரைவில் பேச்சு – மாவை

by admin

அரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் யாழ்; சிறைச்சாலைக்கு சென்று  அங்கு  தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் ஏனைய கைதிகளுடன் கலந்துரையாடிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்க காரணமாயிருந்த போதும்  தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முடியவில்லை எனத் தெரிவித்த அவர் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து எந்தவித செயற்திறன் மிக்க நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்த போது, விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தும் இதுவரையில் கைதிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து கைதிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாவை சேனாதிராசா அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நல்லாட்சி அரசுடன் பல தடவைகள் பேசியிருப்பதாகவும்  எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும்  மிக விரைவில், இறுக்கமான பேச்சுவார்த்தை நடாத்த இருப்பதாகவும், அதில், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் எனவும்  அந்த பேச்சுவார்த்தை மிகவும் கடினமான பேச்சுவார்த்ததையாக இருக்குமென்றும்   நம்பிக்கையுடன் இருக்குமாறு அவர்  அரசியல் கைதிகளிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More