மீதொட்டுமுல்ல அனர்த்தம் ஏற்பட்ட பகுதியில் கொள்ளையிடச் சென்ற 23 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் தேவையின்றி சஞ்சரிக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேச மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு இரவு நேரத்தில் விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குப்பை மேடு சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தினால் இதுவரையில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment