ஈராக்கிய படையினர் மொசூல் நகரின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ள மொசூல் நகரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் மிகப் பெரிய இரண்டாவது நகரமான மொசூல் நகரம் கடந்த 2014ம் ஆண்டு முதல் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த ஆறு மாதங்களாக ஈராக்கிய அரச படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களின் மூலம் மொசூலின் பெரும்பகுதி மீளவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Add Comment