வென்னப்புவ பகுதியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 17 வயதான சிறுமி மற்றும் 15 வயதான சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப உறவினர்களுடன் மா ஓய கடலுடன் கலக்கும் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த வேளையே, இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன்; கண்டெடுக்கப்பட்டுள்ள இவர்களின் உடல்கள் மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment