Home இந்தியா தினகரன் வெளிநாட்டுக்கு செல்லாமல் தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை :

தினகரன் வெளிநாட்டுக்கு செல்லாமல் தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை :

by admin


அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுப்பதற்காக இந்தியா  முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை  கடிதம் அனுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில்,  இந்த  எச்சரிக்கை கடிதம்  அனுப்பப்பட்டுள்ளது.

தினகரன், வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளவர் என்பதால் விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை கடிதம்  அனுப்பியுள்ளதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  தூதரக அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை கடிதம்  அனுப்பப்பட்டுள்ளதாகவும்  போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரை அணுகியதாகவும். இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தால் 60 கோடி ரூபா லஞ்சம் தர தினகரன் தயாராக இருந்ததாகவும் கைது செய்யப்பட்ட சுகேஷ் என்பவர் டெல்லி போலீஸில் தெரிவித்திருந்ததனடிப்படையில் தினகரனுக்கு எதிராக  வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More