Home இலங்கை அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது

அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது

by admin

தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது  ஆண்டு நினைவு தினம் இன்று  புதன்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது

வட மாகாணசபை உறுப்பினர்களான     சு.பசுபதிப்பிள்ளை ப.அரியரத்தினம்  மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மக்கள் தமது  விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை ரீதியான போராட்டம் மூலம் தமிழர்களின் போராட்டத்தினை உலகம் திரும்பிப்பார்க்க வைத்தவராக அன்னை பூபதி விளங்கிவருகின்றார்.

கடந்த காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் காரணமாக அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படாத நிலையில் இம்முறை அவற்றினை பல்வேறு தரப்பினரும் நினைவு கூருகின்றமை குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More