Home இலங்கை கிணறுகளை அமைத்து நெற்செய்கையில் ஈடுபடுதல் சட்டவிரோதம் – மீறினால் மானியங்கள் இரத்து – மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம்

கிணறுகளை அமைத்து நெற்செய்கையில் ஈடுபடுதல் சட்டவிரோதம் – மீறினால் மானியங்கள் இரத்து – மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம்

by admin

கிளிநொச்சியில் நெற்செய்கையில் ஈடுப்படும் விவசாயிகள் கிணறுகளை  பயன்படுத்தி  நெற்செய்கையில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும்  அவ்வாறு மீறி  நெற்செய்கையில் ஈடுப்பட்டால் முதலில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற மானியங்கள் நிறுத்தப்பட்டு  பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இத் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் முறையற்ற விதத்தில் குளத்து நீரை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றவர்கள் மீதும் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கமநல சேவைகள் உதவி ஆணையாளர் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், சட்டவிரோதமாக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க்கப்பட்டால் குறித்த அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

வயல் நிலங்களில் தற்போது விவசாயிகளால் ஆழ் குழாய் கிணறுகள் அமைத்து நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வருடம் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக  ஏற்கனவே பயிர்ச்செய்கை  மேற்கொள்ளப்பட்டு வளர்ந்த பயிர்களை காப்பாற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்ட இடங்களில் ஆழ் குழாய் கிணறுகள் அமைத்து  பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.  அதேநேரம் குறித்த அந்த காலப்பகுதியோடு அந்தக் கிணறுகளை மூடிவிடுவது என்றும்  மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் தீர்மானிக்கப்பட்டது ஆனால் பல விவசாயிகள் குறித்த கிணறுகளை தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே இது எதிர்காலத்தில் நிலத்தடி நீருக்கும் சுற்றுச் சுழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதனால் இவ்விடயத்தில் அதிக கரிசனை காட்டவேண்டும் என்றும்  நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளால் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இக் கூட்டத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், நீர்ப்பாசனத்திணைக்கள் பிரதிப்பணிப்பாளர் சுதாகரன், விவசாய மற்றம் கமநல சேவைகள் திணைக்கள் அதிகாரிகள் கமக்கார அமைப்புகள் என பலரும் கலந்துகெண்டனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More