Home இலங்கை இலங்கையில் தற்பொழுது நிலவும் அதிக வெப்பமான காலநிலையில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

இலங்கையில் தற்பொழுது நிலவும் அதிக வெப்பமான காலநிலையில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

by admin


இலங்கையில் தற்பொழுது  நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றையதினம்இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாவதனால் சளியுடன் கூடிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்  வெப்பமான  காலநிலை காணப்படும் வேளைகளில் வெளிப்பயணங்களில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பும் ஒவ்வொருவரும் தமது  முகத்தை கழுவிக் கொள்ளவேண்டும் எனவும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்த்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்காலப் பகுதியில் வேகமாக பரவும் இன்புளுவென்சா, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்தும், டெங்கு காய்ச்சலிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனவும்  சமிந்தி சமரகோன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More