கோப் குழுவின் தற்போதைய தலைவரான ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹதுன்னெத்திக்கும் முன்னாள் தலைவரான டியு குணசேகர மற்றும் பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா ஆகியோரை மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
நீதிமன்ற விடுமுறை தினங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கோப் குழுவின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு பெல்ஜியத்திற்கு சென்றுள்ளனர். நிதி பயன்பாடு குறித்த ஆய்வுச் சுற்றுப் பயணமாகவே அவர்கள் அங்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment