அமெரிக்காவின் நியூஜோர்க்கில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலையொட்டி நேற்று அங்கு வாக்குசாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தூதரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அங்கு வந்த ஒரு சந்தேகத்துக்குரிய வாகனம் ஒன்று காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பலத்த சோதனை நடவடிக்’கை மேற்கெர்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது
Spread the love
Add Comment