பதவிக்காலம் நிறைவடைந்து தனது நாட்டுக்கு திரும்பவுள்ள இலங்கைக்கான சீசெல்ஸ் தூதுவர் டேவிட் க்லோட் இன்று (26) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்ததாக ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டுச் சென்றாலும் இலங்கைக்கும் சீசெல்சுக்கும் இடையிலான இருதரப்பு அரச உறவுகளைப் பலப்படுத்துவதற்கு உயர்ந்தபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சீசெல்ஸ் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் சீசெல்ஸ் அரசாங்கங்களுக்கு இடையிலான உறவினை மேம்படுத்துவதற்காக அவர் இதுவரைகாலமும் வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி; தூதுவருக்கு நன்றி தெரிவித்தார்.
Spread the love
Add Comment