Home இலங்கை சரத் பொன்சேகாவிற்கு மீளவும் இராணுவத்தில் உயர் பதவி ?

சரத் பொன்சேகாவிற்கு மீளவும் இராணுவத்தில் உயர் பதவி ?

by admin


அமைச்சரும்  முன்னாள் இராணுவத் தளபதியுமான  பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு மீளவும் உயர் இராணுவப் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி பதவியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகாவை நியமிப்பது குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டதாகவும் சிலப் படைப் பிரிவுகளின் ஒழுக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் இவ்வாறு பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More