Home இலங்கை இராணுவத் தளபதி பதவி வழங்குவதாக கூறப்படவில்லை – சரத் பொன்சேகா

இராணுவத் தளபதி பதவி வழங்குவதாக கூறப்படவில்லை – சரத் பொன்சேகா

by admin


இராணுவத் தளபதி பதவி வழங்குவதாக கூறப்படவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உயர் பதவியொன்றை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோரவில்லை எனவும் பாதுகாப்பு தொடர்பான எவ்வித பொறுப்புக்களும் தனக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படுத்தி நாட்டை ஸ்தம்பிதமடையச் செய்யும் சில தரப்பினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட படையணி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும், அதன் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக இவ்வாறான ஓர் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளத் தாம் தயார் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More