Home இந்தியா ஆன்மீக தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது:-

ஆன்மீக தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது:-

by admin

மத்திய அரசை விமர்சனம் செய்தது தொடர்பாக ஆன்மீக தலைவரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆன்மிக தலைவரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு கடந்த ஆண்டு டெல்லியில் யமுனை நதிக்கரையோரம் உலக கலாசார திருவிழாவை நடத்தியதனால் யமுனை நதியின் சமவெளிப் பகுதி பெருமளவில் சேதம் அடைந்திருப்பதாக புகார் எழுந்தமை தொடர்பில் அதனை சீரமைப்பதற்கு 42 கோடி ரூபா செலவு ஆகும் என்றும் இந்த தொகையை வாழும் கலை அமைப்புக்கு அபராதமாக விதிக்கவேண்டும் என டெல்லி பெருநகர வளர்ச்சி ஆணைய நிபுணர் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதுபற்றி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முகநூலில், இதுபோல் அபராதம் விதிக்கப்படவேண்டும் என்றால் கலாசார விழாவுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கும்தான் விதிக்கவேண்டும். யமுனை நதியின் சமவெளி பலவீனமானது என்று கூறி இருந்தால் கலாசார திருவிழாவை தொடங்கும் முன்பாகவே நிறுத்தி இருப்போம் எனத் தெரிவித்திருந்தார்.

இது பசுமைத் தீர்ப்பாயத்தை அவமதிப்பது போல் உள்ளது எனவும் எனவே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும எனக் கோரி யமுனை நதி பாதுகாப்பு ஆர்வலர் மனோஜ் மிஸ்ரா தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More