இலங்கை பிரதான செய்திகள்

கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்றி

இன்றைய முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்ப தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால்  இன்று வடக்கு கிழக்கில் அனைத்துச் செயற்பாடுகளும் செயலிழந்து காணப்பட்டன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறில்  போராட்டம் நடத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு மணித்தியாலம் ஏ9 பிரதான  வீதியை மறித்து  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு தீர்வை  வழங்கு என கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

மேலும்  இனி தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை  அகிம்சை வழியில் போராட போவதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.