தொழிலாளர்களின் உரிமைகள் முடக்கப்படாது என தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் அவ்வாறான கருத்துக்கள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் ஆழத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் நேரில் சந்தித்த போது, தொழிலாhளர்களின் போராட்டங்கள் அடக்கப்படுமா என கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அவ்வாறான எந்தவொரு முயற்சியும் செய்யப்படாது என ஜனாதிபதி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் உரிமைகளை முடக்கவோ வரையறுக்கவோ ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment