மருத்துவர்கள் சத்தமிடுவதனால் அரசாங்கம் கவிழ்ந்துவிடாது என மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்கியுள்ள நிலையில், மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் மருத்துவர்கள் முதலில் அரசியல் கட்சியொன்றையே உருவாக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையிலும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் மருத்துவர்கள் சத்தமிட்டாலும் அவர்களினால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment