Home இலங்கை இந்திய விசா அலுவலகத்தில் றோ அதிகாரிகள் தான் கடமையாற்றுகின்றார்கள். – நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்:-

இந்திய விசா அலுவலகத்தில் றோ அதிகாரிகள் தான் கடமையாற்றுகின்றார்கள். – நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்:-

by admin


யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் இந்திய இராணுவம் நடத்திய படுகொலை தொடர்பில் செய்தி போடும் போது படுகொலை எனும் சொல்லை பாவிக்க வேண்டாம் எனவும், அந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டாம் எனவும் இந்திய கொன்சூலர் ஜெனரல் ஆர். நடராஜன் தன்னை கோருவதாக யாழ்.கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நடராஜன் என்பவர் இந்திய துணை தூதுவர் இல்லை. அவரது பதவி கொன்சூலர் ஜெனரல் என்பது அதிகாரமற்ற பதவி. அது தான் நடராஜனின் பதவி. அத்துடன் இந்திய விசா வழங்கும் அலுவலகத்தில் றோ அலுவலகர்கள் தான் கடமையாற்றுகின்றனர். என்றும் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

உதயன் அலுவகத்தில் பணியில் இருந்த ஊடகவியலாளர் இருவர் படுகொலை செய்யப்பட்ட 11 ஆம் நினைவு தினத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More