Home இந்தியா இந்திய எல்லைப்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்க நடவடிக்கை – பிபின் ராவத்

இந்திய எல்லைப்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்க நடவடிக்கை – பிபின் ராவத்

by admin


இந்திய எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், அவர்கள் தாக்குதலை முறியடிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைப்பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  இராணுவவீர்களின்  உடலையும் சிதைத்துள்ளனர்.  இது தொடர்பில் ஸ்ரீநகரில் இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய போதே பிபின் ராவத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாடே உங்கள் பின்னால் உள்ளது எனவும்  எனவே எதற்கும் தயங்காமல் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடுங்கள் எனவும் அவர் இராணுவீரர்களுகளிடம் தெரிவித்துள்ளார்.   மேலும்  பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் அதிக அளவில் இந்தியாவில் ஊடுருவ தயாராக காத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன எனவும்  எனினும் தமது வீரர்கள் எதற்கும் தயாராக உள்ளனர் எனவும்  அவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More