Home இலங்கை இந்திய பிரதமரின் இலங்கைப்பயணத்தின் போது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்திய பிரதமரின் இலங்கைப்பயணத்தின் போது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

by admin


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 11ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். இந்திய பிரதமர் இலங்கைக்கு பயணம் செய்யும் போது 6, 000 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தகவல் வெளியிட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் முக்கிய பிரபுகளுக்கான பாதுகாப்பு வழங்குவதில் நிபுணத்துவமுடையவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவும’ கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெசாக் பௌர்ணமி விசேடமாக நடைபெறும் பௌத்த விஹாரைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More