ஆப்கானிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் அதிகாரிகள் எல்லைப் பகுதியில் சனத்தொகை மதிப்பீடு மேற்கொண்ட போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் படையினர் இந்த சனத்தொகை மதிப்பீட்டை மேற்கொள்ள விடாது இடையூறு ஏற்படுத்தி வருவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை, பாகிஸ்தான் அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சனத்தொகை மதிப்பீடு நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.
Spread the love
Add Comment