Home விளையாட்டு 2017 வன்னியின் பெரும் போர் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது கிளிநொச்சி மகாவித்தியாலயம்

2017 வன்னியின் பெரும் போர் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது கிளிநொச்சி மகாவித்தியாலயம்

by admin

வன்னியின் பெரும் போர் என வர்ணிக்கப்படும்  இரு பெரும் கல்லூரிகளான கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்க்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் வருடம் தோறும் நடைபெறும் மாபெரும் கடினபந்து  சுற்றுப்போட்டி இந்த வருடம் 2017ம் ஆண்டு ஏழாவது முறையாக 05/05/2017 நேற்று காலை ஒன்பது மணியளவில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது .

நடைபெற்ற நாணைய சுழற்சியில்  கிளிநொச்சி மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றுக்கொள்ள அணித்தலைவரால் களத்தடுப்பு தீர்மானிக்கப்பட்டது தொடர்ந்து துடுப்பெடுத்தாட தயாராகிய புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணி 43.3 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கற் இழப்புக்களிற்கு மொத்தமாக 107 ஓட்டங்களை பெற்றது

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 45 பந்து பரிமாற்றங்களில் 9 விக்கற் இழப்புக்களிற்கு மொத்தமாக 208 ஓட்டங்களை பெற்ற வேளை தமது வெற்றி இலக்குக்கு ஓட்டங்கள் போதுமென அணித்தலைவரால் தீர்மானிக்கப்பட்டு துடுப்பாட்டத்தை இடை நடுவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிடம் கொடுத்தது

தமது இரண்டாவது இனிக்ஸ்  இணை  தொடர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி இரண்டு பந்துகளை எதிர்கொண்டநிலையில் வெளிச்சம் போதவில்லை என அணித்தலைவரால் விண்ணப்பம் செய்யப்பட்டதை அடுத்து நேற்றயதினம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் இன்று காலை ஒன்பது மணிக்கு மீண்டும் தமது ஆட்டத்தை ஆரம்பித்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 24 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கற் இழப்புக்களிற்கு மொத்தமாக 41 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி மகாவித்தியாலய அணி ஒரு இனிக்ஸ் ஆலும் அறுபது ஓட்டங்களினாலும் ஏழாவது வன்னியின் பெரும் போர்  வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது

.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More