Home உலகம் வெடிகுண்டுக்கு அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு பாப்பாண்டவர் கண்டனம்

வெடிகுண்டுக்கு அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு பாப்பாண்டவர் கண்டனம்

by admin

அமெரிக்க ராணுவம் போரில் பயன்படுத்திய மிகப்பெரிய அணு வெடிகுண்டுக்கு, அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ்  கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.  அந்த பெயரை கேட்ட போது தான் மிகவும்  கேவலமானதாக உணர்ந்ததாக  வத்திகானில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தாய் உயிர் மட்டுமே கொடுப்பார் எனவும் எனினும்  இது மரணத்தை மட்டுமே கொடுக்கின்ற இந்தக் குண்டை தாய் என அழைக்கின்றோம் எனவும் கவலை வெளியிட்டுள்ள அவர்   உலகில்  என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் மீது கடந்த மாதம்  சுமார் 9,800 கிலோ நிறையுடைய  குண்டு ஒன்றை வீசிய அமெரிக்கா அந்தக்குண்டுக்கு  அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More