தேர்தல்களுக்கு ஆயத்தமாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் கட்சியை நவீனமயப்படுத்தவும், கட்சிக்குள் இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு கூட்டணியுடனும் இணைந்து கொள்ளாது எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடும் என குறிப்பிட்டுள்ள பிரதமர் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Spread the love
Add Comment